பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் நோக்கினிற் கதிருடையாய் - இங்கு நூற்றுவர்கொடுமையைத் தவிர்த்தருள்வாய் தேக்கு நல்வான முதே - இங்கு சிற்றிடையாய்ச்சியில் வெண்ணெயுண்டாய் "வையகங்காத்திடுவாய் - கண்ணா மணிவண்ணா, என்றன் மனச்சுடரே ஐய நின் பதமலரே - சரண் ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி என்றாள், பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல புண்ணியவாளர் தம் புகழினைப் போல் தையலர் கருணையைப் போல் - கடல் சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல் " பெண்ணொளி வாழ்த்திடுவார்- அந்தப் பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல் போல் கண்ணபிரான் அருளால் - தம்பி கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய் வண்ணப்பொற் சேலைகளாம் - அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே எண்னத்தில் அடங்காவே - அவை எத்தனை எத்தனை நிறத்தனவே. "பொன்னிழைப் பட்டிழையும் - பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய் சென்னியிற்கை குவித்தாள்- அவள் செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே முன்னிய ஹரி நாமம் - தன்னில் - மூளு நற்பயனுலகறிந்திடவே துன்னிய துயிற்கூட்டம் - கண்டு தொழும்பத்துச் சாதனன் வீழ்ந்து விட்டான். "தேவர்கள் பூச்சொரிந்தார் - ஒம் ஜெய, ஜெய, பாரத சக்தி யென்றே ஆவலொடெழுந்து நின்று - முன்னை ஆரிய விட்டுமன்கை தொழுதான். 91