பக்கம்:பாலபோதினி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

[சொல்லதிகாரம்

த்தினால் அவை வினையாலணையும் பெயர்களாம். உ - ம். (சாத்தன் வந்தான், இதில் வந்தான் என்பது சாத்தனுடைய தொழிலையுணர்த்தினமையால் வினைமுற்று.) வந்தானாகியசாத்தனைக்கண்டேன். இதில் வந்தான் என்பது தொழிலைச் செய்தவனையுணர்த்தினமையால் வினையாலணையும் பெயர். அப்போது வேற்றுமையை ஏற்கும்.


இடைச் சொல்.

இடைச்சொல்லாவது தனித்து வழங்காததாய்ப் பெயர்வினைகளோடுகூடிப் பொருளையுணர்த்துவதாம். வேற்றுமை யுருபுகளும், வினையுருபுகளும், சாரியையைகளும் முதலியன இடைச்சொற்களாம்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/27&oldid=1536792" இலிருந்து மீள்விக்கப்பட்டது