பக்கம்:பாலபோதினி.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்கியஇயல்]

29

7. அடைமொழி.-இது பொருள்களை விசேடித்துநிற்கும். விசேடணம். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்களை யடுத்து நின்று அவைகளின் தன்மையை விளக்குவது அடைமொழியாம்.

உ-ம். மகா பலசாலியாகிய வீமசேனன் துரோபதையின் துகிலுரிந்த துச்சாதனனைப் பிடித்துப் பார்ப்பவர்கள் நடுங்கச் சித்திரவதை செய்தான்.

எழுவாய்

பயனிலை

செயப்படுபொருள்

அடைமொழி

வீமன்

பிடித்து வதை செய்தான்

துச்சாதனனை

பார்ப்பவர் நடுங்க

மகா பலசாலியாகிய (எழுவாய்க்கு அடை மொழி) துரோபதையின் துகிலுரிந்த. செ. அ. சித்திர. ப. அ.

8.பயனிலையலயானது திணை, பால், இடங்களில் எழுவாயுடன் ஒத்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/30&oldid=1533931" இலிருந்து மீள்விக்கப்பட்டது