பக்கம்:பாலபோதினி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

[எழுத்ததிகாரம்

நின்பகை இயல்பாயிற்று. நிற்கண்டேன் இரண்டாம் வேற்றுமையில் திரிந்தது.

C. தேன் என்னும் வார்த்தையின் பின் வல்லினம் வந்தால் இயல்பாதலும் சிலபோது ஈறு போய் வலியாவது அதற்கினமாவது மிகுதலும் மெலிவரின் ஈறு கெடுதலும் கெடாமையும் இடைவரின் இயல்பாதலும் ஆகிய விதியைப்பெறும். .

உ - ம். தேன்குடம்; இயல்பு
தேக்குடம்; வலிமிகுந்தது
தேங்குடம்; மெலிமிகுந்தது
தேமொழி; ஈறுகெட்டது
தேன்மொழி; இயல்பு
தேன்வலிமை; இயல்பு

d. தேன் என்பதன் பின் உயிர்வந்தால் இயல்பாகும், அல்லது நிலைமொழியின் ஈற்று னகரம்கெட்டுத் தகரம் தோன்றும். தோன்றிய தகரம் இரட்டிக்கும்.

உ - ம். தேனிறால்: இயல்பு , தேத்திறால்; தோன்றிய தகரம் இரட்டித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/81&oldid=1471019" இலிருந்து மீள்விக்கப்பட்டது