பக்கம்:பாலர் பாடல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அப்பா என்னை
 அழைத்துச் சென்றார்,
அங்கு ஓரிடம்.

அங்கி ருந்த
 குயிலும், மயிலும்
ஆடித் திரிந்தன.

பொல்லா நரியும்,
 புனுகு பூனை
எல்லாம் நின்றன.

குட்டி மான்கள்,
 ஒட்டைச் சிவிங்கி
கூட இருந்தன.

குரங்கு என்னைப்
 பார்த்துப் பார்த்துக்
குறு கு'றென்றது.

யானை ஒன்று
 காதைக் காதை
ஆட்டி நின்றது.

முதலை தலயைத்
 தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/15&oldid=1314803" இலிருந்து மீள்விக்கப்பட்டது