பக்கம்:பாலும் பாவையும்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டுவிட்டான்' என்று யாரோ ஒருவன அகல்யாவைச் சுட்டிக் காடடிச் சொல்வது போலிருந்தது அவனைத் தொடர்ந்து, ஆமாம், எனக்குத் தெரியுமே!அதற்குப் பிறகு அவள் யாரோ ஒரு புத்தகக் கடைக்காரப் பயலுடன் இருந்தாளாம' என்று இன்னொருவன் சொல்வது போலிருந்தது 'அப்படியானால் இவன் மூன்றாவது ஆசாமி என்று சொல்லு' என்று மற்றொருவன் சொல்வது போலிருந்தது இப்படி ஒருவர் பின ஒருவராக ஏதேதோ சொல்வது போலிருக்கவே, அவன் மனம சலனமடைந்தது காதைப் பொத்திக் கொண்டு, மாாபை அழுததிப பிடிததுக்கொண்டு தன் வீட்டை அடைந்தான் அகல்யாவுடன் அவன தன் அறைககுச் செனறு அமர்ந்ததும், “ஸார்' என்று குரல் கொடுததுக கொண்டே, கையில் பால் செம்புடன் அவனுக்கு எதிரே வநது நினறான சமையற்காரன்