பக்கம்:பாலைச்செல்வி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 தூது வந்தன்றே! கல்வி கேள்விகளால் நிறைந்து, அவற்றால் தாம் பெற்ற அறிவுடைமை கண்டு, செருக்கித் திரியாது, வேண்டும் காலத்தல்லது, அவ்வறிவுடைமையினைப் பிறர்க்குப் புலனாக்காது அடக்கி அடங்கி வாழும் ஆன்றோர்களும், உலகம் வாழ்த்துவது தமக்கென வாழாப் பிறர்க்கென வாழும் பெரியோர்களால் என்ற உணர்வுடையராய், வருவார்க்கு வாரி வழங்கும் வள்ளல் களும் வாழ்வதால் பெருமை மிக்க பெருநகரில் பிறந்து, இசைநூல் வல்லார் எழுப்பும் இனிய யாழோசை கேட்டும், மகளிர்க்குரிய மாண்பெலாம் பெற்று, அரங்கேறி ஆடுவதிலும் வல்லராய அழகிகளின் ஆடல்களைக் கண்டும், அகம் மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர் தோழியும், அவள் துணைவியுமாய இரு பெண்கள். அவருள் ஒருத்தி, மணமகளாம் தகுதியை அண்மையில் பெற்றவள். அவள்மீது அள்ளிச் சொரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/229&oldid=822241" இலிருந்து மீள்விக்கப்பட்டது