பக்கம்:பாலைச்செல்வி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & புலவர் கா. கோவிந்தன் விருந்தோம்புவோமாக!” என்று கூறி அவள் துயர் மாற்றி மகிழ்ந்தாள். "எஃகுஇடை தொட்ட, கார்க் கவின்பெற்ற ஐம்பால்போல், மையற விளங்கிய துவர்மணலது; அது ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள்ஐம்பால் அணிநகை இடை இட்ட ஈகையம் கண்ணிபோல் பிணிநெகிழ் அலர்வேங்கை விரிந்தபூ நெறிகொளத், 5 துணிநீரால், தூய்மதி நாளால், அணிபெற, ஈன்றவள் திதலைபோல் ஈர்பெய்யும் தளிரொடும், ஆன்றவர் அடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும், வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும், நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும், 10 உணர்ந்தவர் ஈகைபோல் இணர்ஊழ்த்த மரத்தொடும், புணர்ந்தவர் முயக்கம்போல் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோர் நல்லைமன், இளவேனில்! எம்போலப் பசந்தவர் பைதல்நோய், பகைஎனத் தணித்துநம் இன்னுயிர் செய்யும் மருந்தாகிப், பின்னிய 15 காதலர், எயிறு ஏய்க்கும் தண்அருவி நறுமுல்லைப் போதுஆரக் கொள்ளும் கமழ்குரற்கு என்னும் தூது வந்தன்றே, தோழி! துயர்அறு கிளவியொடு அயர்ந்தீகம் விருந்தே." வேனிற் பருவ வரவு கண்டு தலைவி வருந்த, அதைத் தலைவிக்கு அறிவிக்கும் தூது வரக்கண்டு மகிழ்ந்த தோழி, அதைத் தலைவிக்கு அறிவித்தது. 1.எஃகு-கத்தரிகை;கார்-மேகம்;2.துவர் மணல்-புலர்ந்த மணல், 3. நெறித்தன்ன - பிடித்துவிட்டாற் போன்ற, 4. ஈகை அம் கண்ணி- பொன்னால் செய்த அழகியகண்ணி,5. அலரும்-விரிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/233&oldid=822246" இலிருந்து மீள்விக்கப்பட்டது