பக்கம்:பாலைச்செல்வி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி கீழ் 81 மற்றொரு நாள், இன்ப உணர்வை மிகுதிப் படுத்தல் வேண்டிய நீ, ஒரு விளையாட்டினை மேற் கொண்டனை. உண்மையில் அவள்பால் பேரன்பு கொள்ளும் நீ, அவளை ஒர் இமைப் பொழுதும் பிரியாது, அவள் அண்மையி லேயே இருக்கும் நீ, விளையாட்டாக அவளை விட்டுப் பிரிந்து, சிறிது நாழிகை, அவள் காணாவாறு மறைந்திருந்தனை. விளையாட்டின்பம் குறித்து, நிகழ்ந்த அச்சிறு பிரிவையும் தாங்கிக் கொள்ள மாட்டாது துயர் கொண்டாள்; அத்துணை மென்மையும், நுண்மையும் உடையது அவள் உள்ளம் என்பது உனக்கும் தெரியும். பிறிதொரு நாள், நீ அவளை விட்டுப் பிரிந்தாயும் அல்ல; அவளோடு, அவள் கண்ணெதிரிலேயே இருந்தனை. அப்போது, நின் முகத்தினை நோக்கியவள், அப் பார்வையில் அருட்டன்மை குறைந்திருக்கக் கண்டாள். அருள் நோக்கு இல்லையே ஒழிய, அதில் மருள் நோக்கோ, வெறுப்புக் குறிப்போ சிறிதும் இல்லை. அங்ங்னமாகவும், உன் பார்வையில் அருள் குறைந்திருப்பது கொண்டு, கலங்கிக் கண்ணிர் விட்டாள் அவள். அத்துணைப் பேரன்பும் மெல்லிய உள்ளமும் உடையாள் அவள். அத்தகையாள்பால், அன்ப ! ש_i66־חr சென்று, 'அன்புடையாய் ! உன்னைப் பிரியாது வாழும் இல்வாழ்க்கைக்கு இடையே பிரிந்து போதலை விரும்பிப் பொருள் தேடி வெளிநாடு செல்லத் துணிந்து விட்டார் நின் காதலர். இத்துணை இளமையும், இனிய பண்பும் உடையாளைப் பிரிந்து போவதா என எண்ணிப் பாராமல், அரிதின் முயன்று தேடுவார்க்கே பெறலாகும் பொருளை விரும்பிப் புறப்பட்டு விட்டார். மாறா பாலை-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/83&oldid=822339" இலிருந்து மீள்விக்கப்பட்டது