பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 74 தமிழ் கெடுப்பானைக் கெடுப்பான் தமிழைக் காப்பான்! தரங்குறைந்த எழுத்தெழுதிப் பணந்திரட்டும் நோக்கத்தால் தாள்தொடங்கு கின்றார், இங்கே! உரங்குலைந்த உள்ளத்தார்நரம்பிளைத்த உடலத்தார்வெற்றுணர்வால் ஒடோ டிப்போய், குரங்கினம்போல் தாவியதை வாங்கி,அறைத் தாழடைத்துத் தனிப்படித்து விடாய்தணிப்பார்! இரங்குகின்றோம்! ஒ! ஒ! ஒ! இளைஞர்களே! இளைஞைகளே! வாழ்வென்ப திதுவே தானோ? கயமையினை எழுத்தாக்கிக் கற்பிழப்பைக் கதையாக்கிக் காமத்தைக் கடையில் விற்கும் நயமில்லா இப்போக்கை - முள்மரத்தை - நந்தமிழர் முளையினிலே நசுக்கல் வேண்டும்! வளமிழக்கச் செய்கின்ற இந்நோய்க்கு வாய்த்தநறு மருந்தேசெந் தமிழ்மருந்தாம்! கயமையினைத் தமிழெழுத்தால் விலைபோக்கும் தமிழ்கெடுப்பா னைக்கெடுப்பான் தமிழைக் காப்பான்! - 1978