பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 86 இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! வேலை யற்றவன் ஆட்டு வாலை அளந்து பார்க்கிறான்! - ஒரு வினையு மற்றவன் குப்பைச் சருகைக் கிளறிச் சேர்க்கிறான்! நூலை விற்றவன் பதரை வாங்கி நோம்பிச் சலிக்கிறான்! - ஒரு நொள்ளை மாந்தன் அவனுக் குதவி நொடித்துக் களிக்கிறான்! உழக்கு மெய்யும் பதக்குப் பொய்யும் ஒன்றாய் அளக்கிறான்! - ஓர் உண்மை தெரிந்து புன்மை சொரிந்து உருவம் வளர்க்கிறான்! சழக்கு வினையைத் தேடித் தேடிச் சல்லரி கொட்டுகிறான்! - ஒரு சாவை வேண்டிச் சவத்தை எரிக்கச் சாணி தட்டுகிறான்! எச்சில் துப்பியே நெருப்பை அணைக்க இருமிக் களைக்கிறான்! - ஓர் ஏரி நீரைத் துடைப்பக் குச்சியால் கலக்கிச் சளைக்கிறான்! முச்சில் எடுத்தே ஆற்று மணலைச் சலித்துப் புடைக்கிறான்! - சில மொழுக்கைக் கல்லை எடுத்துக் காட்டி மதகை அடைக்கிறான்! கட்டிக் குளித்த சீலைத் துணியைக் கசக்கிப் பிழிகிறான்! - கைக் கட்கத் துள்ள அழுக்கை எடுத்து முகர்ந்து சுழிகிறான்! - வட்டிக் கணக்கில் முட்டைச் சாம்பல் பொதியை அவிழ்க்கிறான்! முன் வாந்தி யெடுத்த கலயந் தூக்கி வழியில் கவிழ்க்கிறான்!