பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝ04 கணிச்சாறு முதல் தொகுதி மாற்றுரை அன்னவர் மனங்கொள உரைத்தே ஆற்றுதல் அன்றோ அரசியல் திறமை! இவ்வகை இன்றி "ஆஆ ஊஊ எவ்வகை அவரென் கருத்தை எதிர்க்கலாம்? ஆச்சா போச்சா? ஆரவர் தண்டலர்? ஒச்சுக சட்டம்; உமததி கார'மென் றார்ப்புரை செய்தே, அரைகுறை ஆய்ந்து, தீர்ப்பு வழங்கித் திடுமெனக் கடுஞ்சிறை தள்ளி அடைத்துத் தொடையைத் தட்டலால் உள்ள கருத்ததன் உயர்வை இழக்குமா? 170 இல்லை அதுதான் இன்றொடு சாகுமா? தொல்லை தருதலால் நெஞ்சுரம் தொலையுமா? அரசநாற் காலியில் அமர்ந்துளார் முன்னர் முரசறைந் திதனை முழக்குவேன் கேளிர்! தமிழக நிலத்தில் இந்தியைத் தூவுகல் உமிவிதைத் துழைப்பதை ஒத்திடும் என்பேன்! அரங்கிலா நும்மின் அரசியல் நாடகம் குரங்கு கை மாலையாக் குலைவதோ உண்மை! ஒற்றுமை ஒற்றுமை என்றே உழைத்துக் குற்றுமி ஊதிக் கொதியுலை யேற்றி f 30 வெற்றிலை விரித்து விருந்திடல் போல உற்ற உணர்வையும் ஒழித்திடல் உண்மை! நெடும்பயன் கருதா நெறியிலா தீரே! கடுஞ்சிறை யிடினும் கழுத்தைச் சீவினும் உற்ற கருத்தின் உண்மை மாறுமா? பெற்ற தாய்மேல், பெருந்தமிழ் மொழிமேல் ஆணையிட் டிதனை அறைகுவேன் கேளீர்! கோணை மொழியினார் கொள்கைகள் நில்லா! மொழியெனப் படுவது உணர்வினால் முளைப்பது! மொழியெனப் படுவது மாந்தரின் முனைப்பு! 190 மொழியெனப் படுவது கல்விக் கடிப்படை ! - மொழியெனப் படுவது பண்பொளிர் விளக்கம் !