பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 76. 77. 78. 79. 80. 81. 82. 83. 84, இந்திப் போரை எத்தனைக் காலம் நிகழ்த்தவது, இரண்டில் ஒன்றை ஒரே எழுச்சியில் பெற வேண்டும் என்பது. இந்தியை எதிர்த்துப் போரிட ஒருநாள் குறிக்க வேண்டும் என்பது. 1971-இல் இருந்த சென்னை ஆளுநரை இந்திப் போராட்டம் அகற்றியது பற்றியது இது. இந்தியை உடனடியாக மாற்றவில்லையாயின் கருவிப் போராட்டம் நிகழும் என்பது. தமிழக அமைச்சர்கள் இந்தி மொழிக்குக் கங்காணிகளாக இராமல் போனால் இந்தித் திணிப்பே இராது என்று உறுதி கூறுகிறது இது. இந்தித் திணிப்பை எவராலும் தடுத்திட இயலாது என ஆன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கூறியதைத் தமிழனுக்கு உணர்த்தி இனியேனும் எழுச்சி கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்தி மொழி அரசு அலுவல்களில், தொலைக்காட்சியில் திணிக்கப்பட்ட பொழுது அதைக் கண்டித்தெழுதியது இப் பாடல். வெட்டத் தழைக்கும் முள்மரமாய் வளரும் இந்தியை முட்டித் தள்ளி எதிர்த்திடாமல், கட்சிகள் பலவும் தந்நலப் பித்துடன் இருப்பதும், மாநாடு போடுவதும், தீர்மானம் இயற்றுவதுமான வழக்கங்களை உதறித்தள்ளிவிட்டு ஒநாய்க் கூட்டத்தை ஒடுக்க எழடா தம்பி என்று எழுப்புகிறார் பாவலரேறு. இந்தி மொழியை ஆயிரந்தடவை அழிப்பதாலேயோ எதிர்ப்பதாலேயோ எந்த மாற்றமும் வந்திடவில்லை. எங்கள் நிலத்தில் எங்கள் ஆளுமையே வேண்டும் என முழக்கும் குரலே வன்பு வடவரை நடுங்கிட வைக்கும் என்கிறது பாடல். - حسیست-مانسینوس-سسست.