பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 3. čsti 伍,{}, 阪.ö。 15.2-. 臣在。 ஆர்த்திடு கழகம் ஆக்கி வைத்தனர் தமிழின் வேந்தே பார்த்திடு வறுமை நீக்காப் பாவையே பாச்சு வைப்பாய்! . சுவைத்தவா யூறிநிற்கும் செம்பொருள் விண்டு கண்டு துவைத்திடு நெஞ்சுக் கேயோர் இன்பத்திற் கொப்புண்டோ, - (வேந் தவைத்திடு வாழ்த்துப் பெற்றோய் அல்லலைப் பெற்றோன் (கண்டும் சுவைத்திடு வாழ்வைத் தாராய் சுரும்புநான் மலர்நீ யன்றோ ! சூட்டினார் புலவர் பன்னுரல் சூழ்ந்துள்ள வறுமை உந்தும் வாட்டத்தைப் போக்கா தன்னார் வாணாளைத் தீநாள் (ஆக்கி மேட்டிமை பெற்றாய் தீய வஞ்சனை கண்டும் உன்னை ஏட்டிலே தோய்ப்பேன் நீயோ வாழ்வினைத் தீயிற் - (றோய்ப்பாய்! செம்மொழித் திருவே! என்னைச் சேர்ந்த நற்கலையே! - - (வாழ்வின் மும்மொழிப் படையே உள்ளம் மூழ்கின்ற அன்பே ! ஞாலத் தெம்மொழி ஒன்றே ஏற்றம் உண்டென உணர்த்தி மக்கள் மம்மரை யறுப்பேன்; என்றன் மனையினிற் குடிசேர் வாயே! சேராது தனித்தி யங்கும் செந்தமிழ் நாட்டாட் சிக்கே ஒராது தீங்கு செய்யும் உணரார்க்கே உணர்த்து மாற்றான் ஆறாது கதறும் வாயை ஆற்றாமற் கேடு செய்யும் வேறார்க்குத் துணையாய் நிற்பாய்! விரிமதி கொள்ளாய் (வாழி! சொல்லொன்றை யெண்ண லின்பஞ் சுவடியி லெழுத (லின்பஞ் சொல்லொன்றைச் சொல்ல வாய்க்குச் சொல்லொணா [வின்பஞ் சொன்ன சொல்லொன்றைக் கூர்ந்து கேட்ட செவிக்கின்பம் செவியிற் - - (பட்ட சொல்லினால் உடற்கே இன்ப மைவகை யின்ப மம்மா!