பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 10. கணிச்சாறு முதல் தொகுதி ஏறல் இணைந்தொளிர்தல் எண்ணிறந்து மாறியுயிர் ஆறல் அடங்கல் இயல். பிறங்கல் புலனுயர்தல் பீடுணர்வால் ஆழ்ந்துள் உறங்கல் ஒடுங்கல் இயல். பொங்கல் புணர்தல் பொதியுடம்பு விட்டவுயிர் தொங்கல் துதைதல் இயல். சோம்பல் சுடர்தல் சுரப்பித்தல் உள்நிறைந்து கூம்பல் குமைதல் இயல். விசைந்தேறி உள்விளங்கி விண்டவுயிர் சோர இசைந்தாடி ஒன்றல் இயல். எடுத்தல் இயங்கல் இசைந்தாடி உள்ளம் படுத்தல் மடுத்தல் இயல். - 1957