பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கணிச்சாறு முதல் தொகுதி ஆளத் தெரியா அமைச்சர்; அவரடி மீளத் தெரியா மேலதி காரி! அரைப்புதுக் காசும் அவர்தரும் பணத்தில் குறைந்திட விரும்பாக் கல்வித் தலைமையர்! சொல்விற் றுண்ணும் சோம்பலா சிரியர்! அவர்வயின் கற்கும் அரைகுறைப் படிப்பும்! உவர்நிலத் தூற்றாய் என்றும் உவர்ப்பதே ! இத்தகைப் படிப்பிற் கிடிபிடி என்னும் குத்தகை மாணவக் கொள்கையில் கூட்டமே பல்கலைக் கழகத்துப் பார்க்கும் ஒவியம் தமிழனை வடவன் தாழ்த்தினான் அல்லன்! தமிழனைத் தாழ்த்துவோன் தமிழனே! இமையும் மூடாது எழுக இளைஞரே! 125 130 135 - 1965