பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 63 தமிழ் நலத்தைத் தவிர்ப்பாரைத் தவிர்த்திடுக! விழித்திருத்தம் இல்லாதான் மின்மினியை விண்மீனாய் வியப்புறவே உரைப்ப தைப்போல்வழித்திருத்தம் காணாதான் தானறியா ஊருக்கு வழிகாட்ட வந்த தைப்போல், மொழித்திருத்தம் இல்லாத எழுத்தாளர் எதைத்திருத்த முன்வந்திங் கெழுத லுற்றார்? பழித்தொதுக்கி வாருங்கள் அவரெழுத்தை அவர்நலத்தை; பயனுண்டாம் சிறிது நாளில்! தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான்; தன்னலத்தைப் பேண வந்தான்! தமிழினத்தைப் பேணாதான் பிறவினத்தைத் தான்.எங்கன் பேணவுளங் கொள்ள வல்லான்? கமழ்மலரைப் பேணாத மூக்கறையன் கனிநலத்தைக் காணவுளங் கருது வானோ? தமிழ்நலத்தைப் பேணாத எழுத்தாளர் தம்மெழுத்தைத் தம்நலத்தைத் - தவிர்த்தல் நன்றே! - 1974