பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

52

79

ஒற்றுமை பூக்காது


முற்றும் மதிகெட்ட மூட வடபுலத்தீர்!

குற்றுமியை மேன்மேலுங் குத்திச் சலிப்பதுபோல் ஒற்றுமை என்றும், ஒருமைப்பா டென்றுமே வெற்றுரை பேசிடுவீர்; வீணே செயல்புரிவீர்; செற்றுச் சிதைத்திடவே சட்டங்கள் செய்திடுவீர். பற்றின்(றி) இதனைப் பகர்கின்றேன்; பார்ப்பானின் வெற்றுடலில் பூனூல் விளங்குவரை, அந்நெஞ்சில் முற்றியுள "சாதிமத" முட்காடிங் குள்ளவரை, அற்றை "மனுநூல்" அழியுவரை இந்நிலத்தே ஒற்றுமையும் பூக்கா(து); ஒருமையுளம் காய்க்காது; மற்றிந்த மக்கள் மனங்கனிய மாட்டாது; கற்றறிந்தும் மீட்சியில்லை; காண்!”

-1967


தமிழரிடை உணர்வுண்டோ?


வான்முட்டப் பேசுகின்றார்; கைதேய எழுதுகின்றார்; பாடுகின்றார்; வருவாய் என்றால் தேன்சொட்டுக் கங்காந்த சிறுநரிபோல் கொள்கையெல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கி விட்டுக் கூன்தட்டக் குனிகின்றார்; குடும்பமெனக் கூறுகின்றார்; காரணங்கள் கோடி சொல்வார்! ஊன்கெட்ட தமிழரிடை உணர்வுண்டோ? குருதியுண்டோ? சூடுண்டோ? ஊர்த்தொண் டுக்கே!

- 1968