பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/128

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106

திருக்குறள்

தமிழ் மரபுரை


பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
கூற்றங் கொண்டிச் சேனை செல்வது”

(சிலப்.26:156-62)


“ஆரிய வரசரை யருஞ்சிறை நீக்கி”

(சிலப்.28:165) சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண். அஃது இராவணனின் இலங்காபுரியிலும் வாணனின் சோணிதபுரத்திலும் இருந்தது.

"தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்" (சிலப். ஆய்ச்சியர் குரவை)

“ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன்." (நான்மணி.2) சோ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் பொதுவான மதிற்பெயராகவும் ஆண்டுவிட்டனர்.

"சோமே லிருந்தொரு கோறா வெனின்." (சி.சி. மறைஞான தேசிகர் உரை)

காத்தல் என்பது காத்திருத்தல் அல்லது நிலையில்லாது தங்கியிருத்தல். wait என்னும் ஆங்கிலச் சொற்கும் tarry, stay என்று ஆக்கசுபோர்டு ஆங்கிலச் சிற்றகர முதலி பொருள் கூறியிருத்தல் காண்க.

சோகா என்னும் சொல்லை வடசொல் தொடர்பினதாகக் காட்டல் வேண்டி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, அதற்குச் சோகம் + யா என்று மூலங் குறித்திருப்பது பொருந்தாது. யாத்தல் கட்டுதல். அரையாப்பு, கழல்யாப்பு, மார்யாப்பு (மாராப்பு), விதலையாப்பு முதலிய கூட்டுச் சொற்கள்போல் சோக(ம்) யாப்பு என்றொரு சொல்லின்மையும், அவ் விருபிறப்பியில் (hybrid) யாப்பு என்னும் சொல் இயற்கையாகப் பொருந்தாமையும், நோக்குக. இனி, சோ என்னும் சொல்லையும், வாணன் தலைநகர்ப் பெயரான சோணிதபுரம் என்பதன் சிதைவாக அவ் வகரமுதலி காட்டியிருப்பதும் குறும்புத்தனமாம். வாணனுக்கு முந்தின இராவணன் காலத்திலேயே சோவரண் இருந்தமையை நோக்குக.