பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

திருக்குறள்

தமிழ் மரபுரை



4. கொளு விளக்கம்

எ-டு: குறள். 1069, 1225

5. மூலச்சொல்லையே உரையில் ஆளாமை

எ-டு: குறள். 1113, 1328

இனி, இவ் வுரையைக் குறள்தொறும் பரிமேலழக ருரையொடு ஒப்பு நோக்கினும், பலவிடத்துப் பல வகையில் திருத்தமும் வேறுபாடுங் கண்டு இப் புத்துரையின் தேவையை உணரலாம். ஆயின், பரிமேலழக ருரையால் ஒரு பெரு நன்மையும் இல்லையோவெனின் உண்டு, அது எதுவெனின் அவருரைத் தொடர்பால் திருக்குறள் இதுவரை அழிக்கப்படாதிருந்ததே யென்க. எதுபோல வெனின், முதலிரு கழகத்தும் வழங்கிய இயற்றமி ழிலக்கணம் முழுதும். அதன் தொகுப்பாசிரியராகிய தொல்காப்பியரது தொல்காப்பியம் என்னும் பிண்ட நூலான் போற்றப்பட்டு வந்திருப்பது போன்று என்க.

“தாமரைச் செல்வன் தமிழ்நூ லுலகெங்கும்
காமரு கட்டடங் கண்குளிரப் போமுறை
யச்சிட்ட சுப்பையா வாய்ந்தேயும் மெய்ந்நூற்கும்
மெச்சுற்றுப் பார்த்தனன் மெய்ப்பு.”

“இவ்வுரை யச்சீட் டிறுதி தனிநின்று
செவ்வகை பார்த்த செயல்நோக்கின் - எவ்வண்
சுழன்றுந் தமிழுலகம் சுப்பையா பின்னாம்
உழந்தும் அவனே தலை.”

சேர்ப்பு: இத் திருக்குறள் தமிழ் மரபுரைக்குப் பிழைதிருத்தப்பட்டியும் அருஞ்சொல் அகரமுதலியும் தொகுத்த திரு. இராசிபுரம் சேயோனுக்கும். அதிகார அகரமுதலியும் குறள் முதற்குறிப் பகரமுதலியும் தொகுத்த திரு. ஆரணிச் செல்வராசனார்க்கும் என் நன்றி உரித்தாம்.

“முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை
எப்போதும் போல இனிதாகத் - தப்பாமல்
அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர்
அச்சகத்தான் நாரா யணன்.”

“கார்வாழி யேர்வாழி கன்னித் தமிழ்வாழி
சீரார்பல் செல்வருஞ் சிறந்துதவப் - பார்நீடு
பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான்
நாரா யணன்வாழி நன்கு.”

மேலைத் தாம்பரம், சென்னை - 45. ஞா. தேவநேயன்

18, கன்னி, 2000 4-10-1969