பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

திருக்குறள்

தமிழ் மரபுரை



வல்லார்ந்த செந்தமிழில் வாய்ந்த திருக்குறள்போல்
சொல்லார்ந்த மற்றவற்றில் சொல்லரிதாம் – சொல்லார்ந்த
செந்தமி ழுள்ளுஞ் செயவரிதாம் பாவாணர்
முந்துரை செய்நூன் முறை. 7

செந்தமிழுஞ் செங்கதிரால்; சீர்சால் திருக்குறளும்
அந்தமிழால் வீசும் அணிமதியால்; – அந்தமதிக்
கெட்டிநடை யிட்டவறி வேற்றமே பாவாணர்
ஒட்டிநடை யிட்ட உரை.

செப்பா லடித்தவொரு காசுக்குச் செந்தமிழை
எப்பாலும் விற்கும் இழிஞரிடைய – முப்பாலுக்
கொத்த மரபுரையொன் றோதினார் பாவாணர்க்
கொத்த கடனென் றுணர்ந்து.

தேவநே யன்என்னுந் தேர்ந்தமதிப் பாவாணர்
தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை – மேவியபின்
மற்றோர் உரைசெயவும் மானுவரோ? மானுவரேல்
கற்றோர் நகைப்பர் கலித்து.