பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

133

(Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)விலும் வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொது வகராதி (New International Dictionary)யில்" குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்புகளிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டிருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) னமான தாகத் தெரிகின்றது.

அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இருவகை யுண்டு. இவ் விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை,

66

66

55

""

‘ஒதிம விளக்கின்' என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, ஈண்டுக் காரன்ன மென்றுணர்க என்றும், வள்ளையன்னங் காண்மின் என்னும் சீவக சிந்தாமணித் தாடருக்குக் காரன்னமு முண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத்திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம்.

5521

22

உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயைபின்மைக் குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம்.

சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டிலும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ஙனமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டி நாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா,

(3) காட் எலியட்

காட் எலியட் என்பவர் எழுதியுள்ள ‘மூழ்கிய லெமுரியா' (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப்படத்தினால், ஒரு

20.Vol.I. p.200

22. All About Birds, p. 141.

21.சீவக. 4:80.

66