பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/137

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

128

திருக்குறள்

தமிழ் மரபுரை



செல்வம், இன்பம், அறிவு, ஒழுக்கம், ஆட்சி, வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச் செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறை செலுத்துஞ் சிற்றரசனாதல்.

609. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

(இ-ரை.) ஒருவன் மடியாண்மை மாற்ற - ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.

இஃது ஓரரசன் குற்றமுந் திருத்தமும். மடியாண்மை மடியை ஆளுந்தன்மை. 'குடியாண்மை' உம்மைத்தொகை. இனி,

குடி ஆண்மையுள் வந்த குற்றம் - நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் குடியுள்ளும் அதன் தலைவரின் ஆண்மையுள்ளும் நேர்ந்த குற்றங்களால் விளைந்த கேடுகள்; மடியாண்மை - அவற்றிற்குக் கரணியமாயிருந்த சோம்பல் தன்மையை; ஒருவன் மாற்றக் கெடும் - ஊக்கமும் பெருமுயற்சியுமுள்ள ஒரு தலைவன் நீக்கியவுடன் நீங்கும் என்றுமாம்.

இதற்குக் கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை பல்லவர்க்கு அடங்கியிருந்த சோழர் குடியில் தோன்றிய விசயாலயன், கி.பி.850 போல் தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் தன் குடியுயர்வை நிலை நிறுத்தியமை, நல்லெடுத்துக்காட்டாம். குடிமைக் குற்றம் ஒற்றுமை யின்மையும் உட்பகையும் சேரபாண்டியரொடு சேராமையும். ஆண்மைக் குற்றம் போர் முயற்சியின்மை. இஃது ஒரு குடியின் குற்றமுந் திருத்தமும்.

610. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு.

(இ-ரை.) மடி இலா மன்னவன் - சோம்பலில்லாத அரசன், அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும்; ஒருங்கு எய்தும் - ஒருமிக்க அடைவான்.

திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்) மூவுலகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால், அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது. கதிரவன் இயக்கம் கீழிருந்து