'வா' என்னும் வினைச்சொல் வரலாறு
கன்னடம்
115
தமிழ்
கன்னடம்
தமிழ்
வல்லாளன்
பல்லாள
வரகு
பரகு
வலை
பலெ
வறிது
பறிது
வாவல்
பாவல்
வறுகு
பறுகு (g)
இங்ஙனமே சில ஏனைத் திரவிட மொழிகளிலும்.
2. தெலுங்கிற் சில சொற்களின் முதலீரெழுத்துகள் முன்பின்னாக முறை மாறிவிடுகின்றன. அன்று முதலெழுத்தாகிய உயிர்க்குறில்
நீண்டுவிடுகின்றது.
எ-டு:
தமிழ்
தெலுங்கு
தமிழ்
தெலுங்கு
அறை
ராய்
உகிர்
கோரு (g)
இலது
லேது
உள்
லோ
உரல்
ரோலு
எழு
லேய்
வரை (எழுது) என்னுஞ்சொல் இம் முறையில் வராயு என்று திரிந்தபின், ராயு என்று முதன்மெய் கெட்டும் வழங்குகின்றது. இவ்வகையினதே வர்-வ்ரா-ரா (வா) என்னுந் திரிபும்.
3. துடவ மொழியில் பல சொற்களின் ஆகார முதல் ஓகார முதலாகத்
திரிந்துள்ளது.
தமிழ்
துடவம்
தமிழ்
துடவம்
ஓட்
நாய்
நோய்
ஆறு
ஓற்
நாவு
நோவ்
கா
கோவ்
நான்கு
நோங்க்
காண்
கோண்
பாசி
போதி
காய்
கோய்
பாம்பு
போப்
கால்
கோல்
மார் (மார்பு)
மோர்
தாய்
தோய்
மான்
மோவ்
தான்
தோன்
வாய்
போய்
வாழ்
போத்க்
ஓ திரிபும், வ-ப திரிபும் சேர்ந்து வாய்-போய் என்று திரிந்தது
போன்றதே, வா-போ திரிபும்.
குமரிநிலத் தமிழே திரவிட மொழிகட்கெல்லாந் தாயாதலின், இக்காலத் தமிழிலும் ஒருசில சொற்கள் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவத்தையும் ஆணிவேரையும் அறிந்துகொள்ள, போதிய சான்று அத் தமிழிலேயே உள்ளதென்று அறிதல் வேண்டும்.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”.
(தொல். பெய. 1)