தொடரியல்
5. வினாக்குறி (Note of Interrogation)
253
ஒரு வினாவாக்கியம், முற்று வாக்கியமாயும் நேர்கூற்று வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; நேரல் கூற்று வாக்கியமாயும் புணர்ச்சிபெற்ற நேர்கூற்று வாக்கியமாயு மிருப்பின், வினாக்குறி பெறாது.
எ-டு : அது என்ன?
"நீ வருகிறாயா?” என்று கேட்டான்.
நான் போவேனா என்பதாகக் கேட்டான். நீ வருகிறாயா வென்று கேட்டான்.
6. வியப்புக்குறி (Note of Exclamation)
வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப்பின்பும், நேர்கூற்று வியப்புவாக்கிய விறுதியிலும் வரும்.
எ-டு : ஆகா!
“என்னே இதன் பெருமை!” என்றான்.
நேர்கூற்று வியப்பு வாக்கியமாயினும், புணர்ச்சி பெற்றதாயின்
வியப்புக்குறி பெறாது.
எ-டு : என்னே யிதன்பெருமை யென்றான்.
7. விளிக்குறி (Vocative Sign)
-டு : அவைத்தலைவீர்! அவையீர்!
உடன்பிறப்பாளரே! உடன்பிறப்பாட்டியரே!
8.மேற்கோட்குறி (Quotation Marks or Inverted Commas)
மேற்கோட்குறி, ஒற்றைக்குறி
இருவகைப்படும்.
இரட்டைக்குறி வருமிடங்கள்:
i. நேர்கூற்று.
"நான் வருகிறேன்," என்றான்.
ii. மேற்கோள்.
இரட்டைக்குறி என
"மநு என்பவன், நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன்,” என்றார் மறைமலையடிகள்.
"ஒழுக்கமுடைமை குடிமை," என்றார் திருவள்ளுவர்.