54
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
நிற்கலாம். முன் நிற்பது பண்டை முறை; பின் நிற்பது இற்றை முறை. முன் நிற்பின், இரு பெயரும் இயல்பாயிருக்கும்; பின் நிற்பின், இயற்பெயரின் இறுதி பெரும்பாலும் திரியும்.
பண்டை முறை
குலம் :
சோழன் நலங்கிள்ளி
குறமகள் இளவெயினி
தொழில் :
மருத்துவன் தாமோதரன்
ஆசிரியன் முத்துவீரன்
புலமை :
இற்றை முறை
நலங்கிள்ளிச்சோழன் (இளவெயினிக் குறமகள்)
தாமோதர மருத்துவன் முத்துவீரவாசிரியன்
சாத்தப்புலவன்
புலவன் சாத்தன்
தெய்வப்புலவன் திருவள்ளுவன்
(திருவள்ளுவத் தெய்வப்புலவன்)
தவம் :
முனிவன் அகத்தியன்
பட்டம் :
ஏனாதி மாந்தக்கொங்கன்
பதவி :
தலைமையாசிரியர் தியடோர்
அகத்திய முனிவன்
மாந்தக்கொங்கேனாதி
தியடோர் சாமுவேல் தலைமையாசிரியர்
சாமுவேல்
முதலமைச்சர் (ஓமாந்தூர்)
இராமசாமி (இரெட்டியார்)
இராமசாமி முதலமைச்சர்
பட்டப்பெயர்களும் பதவிப்பெயர்களும் தவிர மற்றெல்லாச் சிறப்புப் பெயர்களும், இன்று இயற்பெயர்க்குப் பின்னரே வரும்.
எ-டு : முத்துசாமி ஐயர்
சாமிநாத பண்டிதர்
பெரியசாமிப் புலவர்
குறிப்பு : (1) உயர்ந்தோரைக் குறிக்கும் இயற்பெயரும் சிறப்புப் பெயருமாகிய இருவகைப் பெயர்களும், பெரும்பாலும் உயர்வுப்பன்மை விகுதி பெற்றே வழங்கும்.
எ-டு : கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
(2) உயர்வுப்பன்மை விகுதிபெற்ற சிறப்புப் பெயர்க்கு முன் வரும் இயற்பெயர்கள், உயர்வுப்பன்மை விகுதி பெறா; தனித்துவரின் பெறும்.