68
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
காலம் : 4ஆம் வே.-யும் 7ஆம் வே.-யும் வரும்.
எ-டு : வருகிற ஆவணிக்குக் கலியாணம்.
வருகிற ஆவணியிற் கலியாணம்.
குற்றங்கூறல் : 2ஆம் வே.-யும் 4ஆம் வே.-யும் 6ஆம் வே.-யும்
7ஆம் வே.-யும் வரும்.
எ-டு : நூலைக் குற்றங் கூறினான்.
நூலுக்குக் குற்றங் கூறினான்.
நூலது குற்றங் கூறினான்.
நூலின்கண் குற்றங் கூறினான்.
வேலை செய்தல் : 4ஆம் வே.-யும் 6ஆம் வே.-யும் வரும்.
எ-டு : முதலியாருக்கு வேலை செய்கிறான், ஆசிரியனுக்கு ஏவல் செய்கிறான்.
முதலியாரது வேலை செய்கிறான், ஆசிரியனது ஏவல் செய்கிறான்.
இப் பொருளில் 4ஆம் வேற்றுமையே பெருவழக்காம். வீண் செயல் : 4ஆம் வே-யும் 7ஆம் வே-யும் வரும்.
எ-டு : வீணுக்கு உழைக்கிறான்.
வீணில் உழைக்கிறான்.
வருத்தமும் மகிழ்ச்சியும் : 2ம் வே.-யும், 3ஆம் வே.-யும், 4ஆம் வே-யும் வரும்.
எ-டு : அதுபற்றி வருந்தினான், மகிழ்ந்தான்.
அதனால் வருந்தினான், மகிழ்ந்தான்.
அதற்கு வருந்தினான், மகிழ்ந்தான்.
3ஆம் வேற்றுமை 'ஒடு' உருபு சிறந்தவர்கள் பெயரொடு சேர்ந்துவரும்.
எ-டு: தந்தையொடு மக்கள் வந்தார், நம்பியொடு நாய் வந்தது.
இரு சாராரும் சமமானவராயின், 3ஆம் வேற்றுமையிற் கூறாது முதல்வேற்றுமையிற் கூறல்வேண்டும்.
எ-டு : முதலியாரும் செட்டியாரும் வந்தார்கள், நாயும் கழுதையும் வந்தன.
இருவரிடைப்பட்ட தொடர்பும் நட்பும் பகையும்பற்றிய கூற்று, பின்வருமாறு வேற்றுமை பெறும்: