2
தகுதி வழக்கு
இடக்கரடக்கல்,
1.
2.
மங்கலம்,
3.
குழூஉக்குறி.
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
என மூவகைப்படும்.
அவையில் சொல்லத்தகாத இடக்கரான பொருளை அல்லது கருத்தை அடக்கி (அஃதாவது மறைத்து)ச் சொல்வது, இடக்கரடக்கல் வழக்காம்.
எ-டு. 'பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின்னும்.'
அமங்கலமான கருத்தை மங்கலச் சொல்லாலும் சொற்றொட ராலும் குறிப்பது, மங்கல வழக்காம்.
எ-டு. துஞ்சினான்
இறைவன் திருவடி நிழலடைந்தான்
இயற்கை யெ-தினான்
திருநாடலங்கரித்தான்
பெரும்பிறிது (சாவு) உற்றான்
(செத்தான்)
பிறர்க்குப் புலனாகாதவாறு, ஒரு குழுவார் ஒரு குழுவார் மட்டும் தமக்குள் மறைபொருளவாக வழங்கும் குறிகள் அல்லது சொற்கள், குழூஉக் குறியாம்.
எ-டு. கருந்தலை (1/4)
இருகுரங்குக்கை (முசுமுசுக்கை)
குறிப்பு: ஒரு நாட்டில் ஒரு பகுதிக்கே சிறப்பாயுரிய திசை வழக்கையும், உயர்ந்தோரல்லாதார் வழங்கும் இழிவழக்கையும், அயன் மொழி தழுவிய அயல்வழக்கையும், கட்டுரைகளிலும் நூல்களிலும் வழங்குதல் கூடாது.
திசை வழக்கு
எ-டு: தஞ்சை
வடார்க்காடு
கோவை
கெட்டுப் போயிற்று தாரைவார்ந்து போயிற்று
கூடப்போயிற்று (காணாமற் போயிற்று)
திசைவழக்கு, அவ்வவ் விடத்திற்கு ஏற்கும்; நாடு முழுமைக்கும்
ஏற்காது.