6
இயற்றமிழ் இலக்கணம்
6.
குறியதன் முன்னர் ஆ-தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
(நன். சூ.90)
சூத்திரத்தில் முன் என்றது இடமுன்.
6. குற்றியலுகரம்
19. குறுகி யொலிக்கும் உகரம் குற்றியலுகரம். அது
y என்னும்
வடமொழி யெழுத்துகளில் உள்ள உகரம்போல இகரத்திற்கும் உகரத் திற்கும் நடுத்தரமாயொலிக்கும்.
20. ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெ-யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம். குற்றியலுகரம் வரும்சொல் ஈரெழுத்திற்குக் குறை யாது; ஈரெழுத்தாயின் முதலெழுத்து நெடிலாயிருக்கும்; மூவெழுத்தும் அதற்கு மேலுமாயின் முதலில் எந்த எழுத்து இருப்பினும் சரியே.
21. குற்றியலுகரச்சொல் ஈற்றயல் (கடைசிக்கு முந்தின) எழுத்துப் பற்றி ஆறு தொடராக வகுக்கப்படும்.
எழுத்துகள் தொடர்ந்து நிற்றலின், சொல் தொடர் எனப்பட்டது.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
உ-ம்.
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆறு, காசு
ஆ-தத் தொடர்க் குற்றியலுகரம்
எஃது, அஃது
வரகு, தராசு
பட்டு, சுக்கு
சங்கு, வண்டு
மார்பு, தெள்கு
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
ஆறு று தொடர்களிலும் நெடிற்றொடரொன்றே ஈரெழுத்துள்ளது; ஏனையவைந்தும் மூவெழுத்தும் அதற்கு மேலு முள்ளன.
நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் உயிரும் உயிர்மெ-யும் ஈற்றயலாக வரும்; ஆ-தத் தொடர்க்கு ஆ-தம் ஈற்றயலாக வரும். ஏனைத் தொடர்கட்கு மெஈற்றயலாக வரும்.
உயிர்த்தொடரில் ஈற்றயலா வருவது உயிர்மெ-யேனும், அஃது உயிரும் மெ-யுமாகப் பகுக்கப்படும்போது, உயிரே ஈற்றயலா- நிற்றலின் உயிர்த்தொட ரெனப்பட்டது.
நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் வேறுபாடு.