4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
௨. சொல்லியல்
1.சொல்
27. எழுத்துத் தனித்தாவது, (பலவாகத்) தொடர்ந்தாவது பொருள் தரின்
சொல்லாம்.
உ-ம்.
ஆ, ஈ,
ஆணி,
அறம்,
ஓரெழுத்துச் சொற்கள்.
பலவெழுத்துச் சொற்கள்
-
விரும்பு,
நடந்தனன்.
ஆ பசு. தன்னை யுணர்த்தும்போது எழுத்து; பசுவை உணர்த்தும் போது சொல்.
28. சொற்கள் அமைப்பைப்பற்றிப் பகாப்பதம், பகுபதம் என இரு ரு வகைப்படும்.
பகுத்தல் = வகுத்தல். பதம் = சொல்.
29. பகாப்பதம் பல உறுப்புகளாகப் பகுக்கப்படாது ஒரே வடி வாயிருக்கும் சொல்.
உ-ம்.
கண், படி.
இச் சொற்களைப் பல உறுப்புகளாகப் பிரிப்பின் பொருள்தரா.
30. பகுபதம் பல உறுப்புகளாகப் பகுக்கப்படும் சொல். அவ் வுறுப்பு களில் முதலிலிருப்பது பகுதி யென்றும், கடைசியிலிருப்பது விகுதி யென் றும், இடையிலிருப்பது இடைநிலையென்றுங் கூறப்படும்.
அவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் பொருள் தரும்; அல்லது பயன் நோக்கி நிற்கும்.
உ-ம்.
கண்ணன் - கண் பகுதி, அன் விகுதி.
செ-கிறான் - செ- பகுதி, கிறு இடைநிலை, ஆன் விகுதி.
பகாப்பதத்திலிருந்தே பகுபத முண்டாகும். பகாப்பதத்தோடு விகுதி முதலிய உறுப்புகள் சேரின் பகுபதமாம். பகாப்பதம் பகுபதத்திற் பகுதியா யமைந்திருக்கும்.
9