26
உ-ம். கம்பரது கவித்திறம்.
எனாது கை.
ஒருமை
இயற்றமிழ் இலக்கணம்
இராமன் குணங்கள்.
எனபொருள்கள்.
இறைவனுடைய செயல்.
இறைவனுடைய செயல்கள்.
பன்மை
பொதுமை
இனி, அன் இன் என்பனவும் ஆறாம் வேற்றுமை யுருபாக வரும்
அவை இருமைக்கும் பொது.
உ-ம், ஒன்றன் பெயர்கள் - பன்மை
தமிழின் பெருமை - ஒருமை
தமிழின் பெருமைகள் - பன்மை.
79. ஏழாம் வேற்றுமை: ஏழாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் இடப்பொருளாக வேறுபடுவது. இதனால் இஃது இடவேற்றுமை யென்று கூறப் படும். இதற்கு உருபு இல் என்பது. கண், கால் முதலியன சொல்லுருபுகள்.
17.
உ-ம். வீட்டில் இருக்கிறது.
மதியின்கண் மறு.
கண்கால் கடைஇடை தலைவா-திசைவயின்
முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
உள்அகம் புறம்இல் இடப்பொரு ளுருபே.
(நன்.சூ.302)
இச் சூத்திரத்தில் சொல்லப்படாத சொல்லுருபுகளு முள. அவை பக் கம்,ஓரம்,மாடு, பாங்கர், கிட்ட, முகம், பால், புறம், அண்டை என்பன.
உ-ம். மலைப்பக்கம், ஆற்றோரம், தலைமாடு.
80. எட்டாம் வேறுமை: எட்டாம் வேற்றுமையாவது எழுவா-ப் பொருள் விளிப்பொருளாக வேறுபடுவது இதனால், விளிவேற்றுமை யென்று கூறப்படும். விளித்தல் - கூப்பிடுதல்.
முதல் வேற்றுமைக்குப் போலவே எட்டாம் வேற்றுமைக்கும் உரு பில்லை. ஆனால் முதல் வேற்றுமை இயல்பாயிருக்கும்; எட்டாம் வேற்றுமை விகாரப்படும். அவ் விகாரம் ஈறு திரிதல், ஈறு குன்றல், ஈறு மிகுதல், ஈற்றயல் திரிதல் எனப் பலவகை. இவ் விகாரங்களையே எட்டாம் வேற்றுமையுரு