4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
27
பாகப் பாவிக்கலாம். ஒரே பெயர் ஒரு விகாரமன்றிப் பல விகாரங்களை யடை வதுமுண்டு. குன்றல் - குறைதல் அல்லது கெடுதல்.
உ-ம்.
பிள்ளா-! நாரா-! - ஈறு திரிதல்.
அரச! நண்ப -ஈறுகுன்றல்.
கடவுளே! தாயே! - ஈறு மிகுதுல்.
மக்காள்! அன்பர்காள்! - ஈற்றயல் திரிதல்.
விளி
—
அண்ணா! - ஈறு குன்றலும் அயல் திரிதலும்
அண்ணாவோ! - ஈறு குன்றலும், அயல் திரிதலும், ஈறுமிகுதலும்.
அண்மை விளி, சே-மை விளி என இருவகைப்படும். அண்மை சமீபம். சே-மை தூரம். அண்மை விளி பெரும்பாலும் இயல்பாயிருக் கும். இஃது இயல்பு விளி யெனப்படும்.
உ-ம். தம்பி! சுந்தரம்!
சில விளிப்பெயர்கள் முதல் வேற்றுமைப் பெயர்களாகவே உலக வழக் கில் வழங்குகின்றன.
உ-ம்.
ஐயா, அப்பா.
18.
எட்டன் உருபே எ-துபெயரீற்றின்
திரிபு ஏன்றல் மிகுதல் இயல்பயல்
திரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தானழைப் பதுவே.
(நன்.சூ.303)
வேற்றுமை யுருபுகள் சில விடத்துத் தாக்கு (மறைந்து) வருவது முண்டு. அது வேற்றுமைத் தொகை எனப்படும்.
உ-ம்.
பாடம் படித்தான்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
கல்லெறிந்தான்
மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஊர் போனான்
நான்காம் வேற்றுமைத் தொகை
மலைவீழருவி
ஐந்தாம் வேற்றுமைத் தொகை
கபிலர் அகவல்
ஆறாம் வேற்றுமைத் தொகை
கூடு பா-ந்தான்
ஏழாம் வேற்றுமைத் தொகை
ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளில் வருவது முண்டு, அது வேற்றுமை மயக்கம் எனப்படும். மயக்கம் கூட்டம் அல்லது கலப்பு