4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
உ-ம். வருவல், வருவன், வந்தனென், வந்தேன்.
படிப்பல், படிப்பன், படித்தனென், படிப்பேன்.
31
93.அம், ஆம், எம், ஏம், ஓம் என்பன தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகளாகும்.
உ-ம்.
செ-தனம், செ-வாம், செ-கின்றனெம், கூறினேம், கூறினோம்.
முன்னிலை வினைமுற்று விகுதிகள்
94. ஐ, ஆ-, தி என்பன முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி களாகும்.
உ-ம்.
உண்டனை, உண்டா-, உண்ணுதி,
வந்தை, வருகின்றா-, வருதி.
95. இர், ஈர், கள், என்பன முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி களாகும். அவற்றுள் கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.
உ-ம்.
செ-தனிர், செ-தீர், செ-தீர்கள்.
நடந்தனிர், நடக்கின்றீர், நடப்பீர்கள்.
96. ஏவல் வினைகளில், ஒருமை ஏவல் விகுதி பெறாதும் 'தி' விகுதி பெற்றும் வரும்; பன்மை ஏவல் மின், உம், கள் என்னும் விகுதிகளைப் பெற்று வரும். அவற்றுள் கள் என்பது விகுதிமேல் விகுதியாவரும்.
உ-ம். வா, வருதி
ஒருமை.
வம்மின். போமின்.
செ-யும், செ-யுங்கள்.
}
பன்மை
படர்க்கை வினைமுற்று விகுதிகள்
97. அன், ஆன் என்பன உயர்திணை ணை ஆண்பாற் படர்க்கை வினை முற்று விகுதிகளாகும்.
உ-ம்.
படித்தனன், படிக்கின்றான்.
98. அள், ஆள் என்பன உயர்திணைப் பெண்பாற் படர்க்கை விகுதிகள்.
உ-ம்.
படித்தனள், படிக்கின்றாள்.