32
இயற்றமிழ் இலக்கணம்
99.அர், ஆர்,ப என்பன உயர்திணைப் பலர்பாற் படர்க்கை விகுதி கள். ஆர் விகுதியோடு கள் என்பது விகுதிமேல் விகுதியா-வரும்.
உ-ம்.
படித்தனர், படிக்கின்றார், படிப்ப. கூறினர், கூறினார், கூறுப.
படிக்கின்றார்கள்.
100. து, று, டு என்பன அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை விகுதிகள்.
உ-ம். வந்தது, ஆயிற்று, உண்டு.
101. அ, ஆ என்பன அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை விகுதிக ளாகும். 'அ' என்பது உடன்பாட்டிலும், 'ஆ' என்பது எதிர்மறையிலும் வரும்.
உ-ம்.
உண்ணுகின்றன - உடன்பாடு. உண்ணா - எதிர்மறை.
இடைநிலை
102. இடைநிலைகள் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலங் காட்டும்.
103. காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைப்படும்.
-
—
இறந்தகாலம் முன்னே கடந்துபோன காலம். நிகழ்காலம் இப்போது நடக்கின்ற காலம். எதிர்காலம் இனிமேல் வருங்காலம். இறத்தல் - கடத்தல். நிகழ்தல் - நடத்தல்.
19. இறப்பெதிர்வு நிகழ்வெனக் காலம் மூன்றே.
இறந்தகால இடைநிலைகள்
104. த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகளாம்.
(நன்.சூ.382)
ன்
உ-ம்.
த்படித்தான்
ட் - உண்டான்
இன் - உறங்கினான்.
இன் என்னும் இடைநிலை ன் என முதல் குறைந்தும், இ எனக் கடை குறைந்தும் நிற்கும்.
ற் - சென்றான்.
உ-ம்.
போனான் - போ + ன் +
ஆ ன்
சொல்லியது - சொல் + இ + அ + து