34
இயற்றமிழ் இலக்கணம்
ஏவல் வினைகள் எந்த உறுப்பினாலும் காலங் காட்டுவதில்லை. ஆனால், ஏவின வினைகளெல்லாம் ஏவினபிறகே செ-யப்படுவதால், ஏவல் வினைகளெல்லாம் எதிர்காலமென் றறியப்படும்.
தன்வினை, பிறவினை
107. வினைகளெல்லாம் கருத்தாப்பற்றித் தன்வினை, பிறவினை என இருவகைப்படும்.
108. தன்வினையாவது ஒருவன் தானே செ-யும் வினை.
உ-ம்.
வந்தான், சென்றான்.
109. பிறவினையாவது ஒருவன் பிறனைக்கொண்டு செ-விக்கும் வினை.
உ-ம்.
வருவித்தான், செலுத்தினான்.
தன்வினையிலிருந்தே பிறவினை யுண்டாகும்.
தன்வினை பிறவினையாகும் வகைகள்
(1) விகுதிப்பேறு: சில தன்வினைகள் வி, பி, சு, து என்ற விகுதிகளில் ஒன்றைப் பெற்றுப் பிறவினையாகும்.
உ-ம்.
வி - வருவி, தருவி, எழுதுவி.
-
- உண்பி.
சு-பா-ச்சு, கா-ச்சு.
து - (புகு+து) புகுத்து.
து - (உருள் + து) உருட்டு.
து - (பயில் + து) பயிற்று.
(2). வலியிரட்டல்: சில தன்வினைகள் வல்லெழுத்து இரட்டித்துப் பிற வினையாகும்.
உ-ம்.
போகு - போக்கு.
பழகு -பழக்கு.
(போகு-பகுதி)
ஆடு-ஆட்டு.
உருகு -உருக்கு.
ஆடு-ஆற்று. தேறு தேற்று.
—
(3) பகுதி வலித்தல்: சில தன்வினைகள் வலித்தல் விகாரத்தால் பிறவினையாகும். வலித்தல், மெல்லினம் வல்லினமாதல்.