4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
உ-ம். கலங்கு - கலக்கு. எழும்பு -எழுப்பு.ஈண்டு - ஈட்டு.
பொருந்து பொருத்து. தோன்றுதோற்று.
35
தோற்று என்பது இக்காலத்தில் பிறவினைப் பொருளிழந்து தன்வினை யாகவே வழங்குகின்றது.
(4).இடைநிலை வலித்தல்: சில வினைகள் பகுதியளவில் இருவினை க்கும் பொதுவாதலின், இடைநிலை வலித்துப் பிறவினையாகும்.
இடைநிலை யென்றது இடையிலிருக்கும் எழுத்தை.
உ-ம்.
இறந்தகாலம்:
தே-ந்தான் - தே-த்தான்.
குறைந்தான் - குறைத்தான்.
அழிந்தான் – அழித்தான்.
நிகழ்காலம்:
}
சந்தி வலித்தல்
கெடுகிறான்- கெடுக்கிறான் - வலிமிகல்.
எதிர்காலம்:
ஒழிவான் -ஒழிப்பான் - வலிமிகலும் இடைநிலை வலித்தலும்.
(5) பிறவினைப் பொருள்: சில வினைகள் எல்லா வடிவிலும் தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாயிருத்தலால். பிறவினைப் பொரு ளாலேயே பிறவினை என்று அறியப்படும்.
தன்வினை
பிறவினை
உ-ம்.
விறகு பிளந்தது. கதவு திறந்தது.
விறகைப் பிளந்தான். கதவைத் திறந்தான்.
துணியை வெளுத்தான்.
துணி வெளுத்தது.
உலக வழக்கில் சில தன்வினைகளில் எச்சத்தோடு செ-, வை முத லிய துணை வினைகளைச் சேர்த்துப் பிறவினையாக வழங்குவர்.
உ-ம்.
—
படி படிக்கச்செ-
படிக்கப்பண்
படிக்கச்சொல்
நிகழ்கால வினையெச்சமும் துணை வினையும்
படிக்கவை
படிக்கப்போடு
படித்துக்கொடு
இறந்தகால வினையெச்சமும் துணை வினையும்.