4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
இசைநிறை -செ-யுளில் இசைநிறைக்க வரும் ஏ முதலியன.
அசைநிலை -i. செ-யுளில் இசைநிறைக்க வரும் மற்று ஏ முதலிய அசைச்சொற்கள்.
ii. ஆம், ஆம், நல்லது நல்லது என உலக வழக்கில் வரும்
அசைநிலைகள்.
இரட்டைக்கிளவி - கலகல, மடமட முதலியன.
41
இனி, தனித்து வந்து தத்தம் பொருளை யுணர்த்தும் இடைச்சொற்கள் தான், மற்று, பிற, என, என்று முதலியன.
உரிச்சொல்
126. உரிச்சொல் செ-யுட்கே யுரித்தா- இடம்நோக்கிப் பொருளுணரப் படும் அருஞ் சொல்லாகும்.
உ-ம்.
கழிநெடில் கழி = மிக.
கடிவினை - கடி = திருமணம்.
தடந்தோள் - தடம் = பெருமை.
வயவேந்தர் வயம் = வெற்றி.
புணரியல்
127. சொற்கள் ஒன்றோடொன்று புணர்வது புணர்ச்சியாகும். புணர் தல் -பொருந்துதல்.
புணர்ச்சி வடமொழியில் சந்தி எனப்படும்.
128. புணர்கின்ற இரு சொற்களில் முந்தினது நிலைமொழி யென்றும், பிந்தினது வருமொழி யென்றுங் கூறப்படும்.
முதலாவது நிற்கின்ற மொழி நிலைமொழி. இரண்டாவது அதனொடு கூட வருகின்றமொழி வருமொழி.
உ-ம்.
இராமண் வந்தான் - இராமன் - நிலைமொழி.
வந்தான் - வருமொழி.
129. புணர்ச்சி இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகைப்படும்.
130. இயல்பு புணர்ச்சியாவது யாதொரு விகாரமுமின்றி இயல்பாகப் புணர்தல்.