4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)
45
உ-ம்.
பலா + கா = பலாக்கா -
31.
உண்ண + போனான் = உண்ணப்போனான்
மர(ம்) + குலம் = மரக்குலம்
பண்டை + காலம் = பண்டைக்காலம்.
}இயல்
இயல்புயிரீற்றின் முன் வலி மிக்கது.
விதியுயிரீற்றின் முன் வலி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்வித வாதன மன்னே.
(3) பூமுன் வல்லினம்
மிக்கது.
(நன். சூ.165)
137. பூ என்னும் பெயர்முன் வரும் வலி மிகும். அதோடு அதன் இன மெல்லினமுந் தோன்றும். இனமெல்லினந் தோன்றல் பெரும்பான்மை.
உ-ம். பூ + கொல்லை = பூக்கொல்லை-
+ கடை = பூக்கடை
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + செடி = பூஞ்செடி
பூ + குழல்= பூங்குழல்
பூ + பாவை= பூம்பாவை
வலிமிகல்
} இன மெல்லினர் தோன்றல்
32. பூப்பெயர் முன்இன மென்மையுந் தோன்றும்.
(4) தனிக்குறிலடுத்த மெ--யின் முன் உயிர்
(1560T. (.200)
138. தனிக்குறிலை யடுத்த மெ-, வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டும்.
இரட்டுதல் - இரட்டித்தல்.
உ-ம். கண் + ஓட்டம் = கண்ணோட்டம்
சொல் + அழகு = சொல்லழகு
நிலைமொழியீற்று மெ- மிகுவது இரட்டித்தல் என்றும், வருமொழி
மெ-மிகுதல் என்றும் கூறப்படும்.
33. தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும்.
(5) னகரச் சாரியை தோன்றல்
(1560T. (.205)
139. ஆ, மா, கோ என்னும் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும் போது இயல்பா-நிற்கவும் னகரச் சாரியை தோன்றவும் பெறும்.
ஆ = பசு. மா = விலங்கு, குதிரை, மான். கோ = அரசன்