5 ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
1. எழுத்தியல்
1. சுட்டெழுத்து
1. அ, இ, உ என்னும் மூன்றெழுத்துகளும் ஒரு சொல்லின் முதலில் வந்து சுட்டுப்பொருளைத் தரின் சுட்டெழுத் தெனப்படும்.
சுட்டுப் பொருள் - ஒன்றைக் குறித்துக் காட்டும் அர்த்தம்.
2. சுட்டு அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படும்.
3. அகச்சுட்டாவது ஒரு சொல்லுக்குள்ளேயே நின்று சுட்டுப்பொரு ளைத் தருவது. (அகம் - உள்)
உ-ம். அவன், அது, அந்த
இவன், இது, இந்த
உவன், உது, உந்த
சொல்லுக்குள்ளே நிற்றலாவது சொல்லுக்கு உறுப்பா- நிற்றல். அவன் என்னும் சொல்லில் அ என்னும் சுட்டெழுத்து ஓர் உறுப்பாயுள்ளது. அவ் வெழுத்தைப் பிரித்துவிட்டால் அவன் என்னும் சொல் இல்லாமற் போம். ஆகையால் அவன் என்பதில் அ என்பது அகச்சுட்டாயிற்று.
4. புறச்சுட்டாவது ஒரு சொல்லுக்குப் புறமாக நின்று சுட்டுப்பொரு ளைத் தருவது. (புறம் - வெளி)
உ-ம்.
அம் மனிதன்
இம் மனிதன்
உம் மனிதன்
அம் மனிதன் என்பதில் அ, மனிதன் என்று இரு சொற்கள் உள. அ என்னும் சுட்டெழுத்து மனிதன் என்னும் சொல்லுக்குப் புறமாகவுளது; ஆகையால் புறச்சுட் டெனப்பட்டது. இங்ஙனமே பிறவும். அ என்பது ஓர் எழுத்தாயினும் பொருள் தருதலின் சொல்லெனப்பட்டது.