5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
அகச்சுட்டு தனிமொழியிலும், புறச்சுட்டு தொடர்மொழியிலும் வரும்.
49
குறிப்பு: அகரம் தொலைவிலுள்ள பொருளையும், இகரம் பக்கத் திலுள்ள பொருளையும், உகரம் இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள பொரு ளையும், பின்னாலுள்ள பொருளையும் மேலேயுள்ள பொருளையும் சுட்டிக் காட்டும்.
உ-ம்.
-
- இடை - உவன்
பின் - உப்பக்கல் (பின்பக்கம்), உத்தரகாண்டம் (பின்காண்டம்)
மேல் - உயரம், உச்சி, உன்னதம், உம்பர் (அகச்சுட்டு)
அகரம் சே-மைச்சுட்டு என்றும், இகரம் அண்மைச்சுட்டு என்றும், உகரம் இடைமைச் சுட்டு என்றும் கூறப்படும்.
உகரச்சுட்டு செ-யுள் வழக்கு.
1. அ, இ, உமுதல் தனிவரிற் சுட்டே.
௨. வினாவெழுத்து
(நன். சூ.66)
5. ஆ, எ, ஏ, ஓ என்னும் உயிரெழுத்துகளும், யா என்னும் உயிர் மெ-யெழுத்தும் வினாப்பொருளில் வரும்போது வினாவெழுத்துகளாம்.
6. ஏ, யா என்பவை சொல்லுக்கு முதலிலும், ஆ, ஓ என்பவை சொல் லுக் கீற்றிலும், ஏ என்பது அவ் வீரிடத்திலும் வினாவாக வரும்.
7. வினா அகவினா, புறவினா என இருவகைப்படும்.
8. அகவினா: ஒரு சொல்லுக்கு அகமாக நின்று வினாப்பொருளைத் தருவது அகவினா. (அகம் - உள்)
உ-ம்.
எவன்?
ஏது?
யார்?
மொழிமுதல் அகவினா.
எவன் என்னும் சொல்லில் எ என்னும் வினாவெழுத்து ஓர் உறுப் பாகவுள்ளது. அவ் வெழுத்தைப் பிரித்துவிட்டால் எவன் என்னுஞ் சொல் இல்லை. ஆகையால் அது அகவினா எனப்பட்டது. இங்ஙனமே பிறவும்.
9. புறவினா: ஒரு சொல்லுக்குப் புறமாக நின்று வினாப்பொருளைத் தருவது புறவினா. (புறம் - வெளி)