5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
வேற்றுமைப் பொருள்கள்
வேற்றுமை
59
32. முதல் வேற்றுமை: முதல் வேற்றுமை, கருத்தாப் பொருளில் வரும். (கருத்தா எழுவா; தொழில் செ-பவன்.)
உ-ம்.
-
இராமன் படிக்கிறான் - இராமன் எழுவா-.
33. இரண்டாம் வேற்றுமை: இரண்டாம் வேற்றுமை, செயப்படு பொருட் பொருளில் வரும்.
செயப்படுபொருள் ஒரு கருத்தாவாற் செயப்படும் பொருள். அது பொருளாகவாவது தொழிலாகவாவது இருக்கும். செயப்படுபொருள் செ- பொருள் என்றும் கூறப்படும்.
உ-ம். குயவன் குடத்தை வனைந்தான் - குடம்
இராமன் பாடத்தைப் படித்தான் - பாடம் செ-பொருள்
34. மூன்றாம் வேற்றுமை: மூன்றாம் வேற்றுமை, கருவிப் பொருளி லும், கருத்தாப் பொருளிலும், உடனிகழ்ச்சிப் பொருளிலும் வரும்.
உளியாற் செ-தான் - உளி கருவி.
கொத்தனாற் கட்டப்பட்டது - கொத்தன் கருத்தா.
இராமனோடு இலக்குமணன் சென்றான் - இராமன் செலவோடு இலக்குமணன் செலவு உடனிகழ்தல் உடனிகழ்ச்சி.
35. நான்காம் வேற்றுமை: நான்காம் வேற்றுமை, கொடை, பகை, நேர்ச்சி முதலிய பொருள்களில் வரும்.
(நேர்ச்சி - நட்பு.)
-
அதிகமான் ஔவைக்கு அருநெல்லிக்கனி அளித்தான் கொடை. பாம்பிற்குக் கீரி பகை - பகை.
சேரமான் பெருமாளுக்குச் சுந்தரமூர்த்தி நண்பர் - நேர்ச்சி.
36. ஐந்தாம் வேற்றுமை: ஐந்தாம் வேற்றுமை, நீங்கல் ஒப்பு முதலிய பொருள்களில் வரும்.
உ-ம். மரத்தினின்று விழுந்தது மலர் - நீக்கம்.
—
காக்கையிற் கரிது களம்பழம் ஒப்பு.