62
இயற்றமிழ் இலக்கணம்
5. வினைச்சொல்
44. வினைச்சொல் தெரி நிலைவினை, குறிப்புவினை என இரு வகைப்படும்.
தெரிநிலைவினை
45. தெரிநிலைவினையாவது காலமும் செயலும் வெளிப்படையாகத் தெரிய நிற்கும் வினை.
தெரிய நிற்பது தெரிநிலை.
உ-ம்.
வந்தான்.
46. தெரிநிலைவினை செ-பவன் (கருத்தா), கருவி, நிலம் (இடம்), செயல், காலம், செ-பொருள் என்னும் இவ் வாறையுங் காட்டும்.
இவற்றுள் செ-பவன், செயல், காலம் என்னும் மூன்றும் முறையே விகுதி, பகுதி, இடைநிலை என்னும் வினையுறுப்புகளால் வெளிப்படை யாகவும், ஏனைய குறிப்பாகவும் தோன்றும்.
தெரிநிலைவினை முற்றாயிராது எச்சமாயிருப்பின் செ-பவனைக் காட்டாது; செயப்படுபொருள் குன்றிய வினையாயிருப்பின், செ-பொருளை யுங் காட்டாது.
உ-ம்.
7.
வனைந்தான்
இதில் வனை என்னும் பகுதியால் வினை (செயல்)யும், த் என்னும் இடைநிலையால் காலமும், ஆன் என்னும் விகுதியால் செ-பவனும் வெளிப்படையாகத் தெரிந்தன. ஏனைக் கருவி, நிலம், செ-பொருள் என்னும் மூன்றும் ஊகித் தறியப்படும்.
செ-பவன் கருவி நிலம்செயல் காலம் செ-பொருள் ஆறும் தருவது வினையே.
(நன். சூ.320)
குறிப்பு வினை
47. குறிப்பு வினையாவது செயலைக் குறிப்பாக உணர்த்தும் வினை.
உ-ம்.
உண்டு, பெரிது.
48. குறிப்புவினை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயரின் அடியாகப் பிறந்து, விகுதி (வினைமுற்று விகுதி)யால் வினைமுதலை (கருத்தாவை) மட்டும் காட்டும்.