5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
69
64. வியங்கோள் வினை, க, இய, இயர்,அ, அல், இ, ஈயர், உம் முத லிய விகுதிகளைப் பெற்று வரும். உம் உலக வழக்கில் மட்டும் வரும்.
உ-ம்.
செ-க
செ-யிய
செ-யியர்
வாழ
நான், நாம் நீ, நீர்
வாழல்
அவன், அவள், அவர், அது,அவை.
வாழி
நிலீயர்
எழுதவும்
வியங்கேள் வினை, ஏவல், வேண்டுகோள் வாழ்த்தல், வைதல் (சாபம்), வஞ்சினம், வாக்கு முதலிய பல பொருள்களில் வரும்.
(வஞ்சினம் - சபதம்)
உ-ம்.
வருக - ஏவல்.
தருக - வேண்டுகோள்.
வாழ்க -வாழ்த்தல். அழிக-வைதல்.
நான் அவனை வெல்லாவிடின்
அவற்கு அடிமையாக.
இத் தொகையை வட்டியும்
அசலுமாகக் கொடுத்துவிடுவேனாக.
வஞ்சினம்.
}
வாக்கு.
ஏவல்வினை, வியங்கோள்வினை என்னுமிரண்டும் எப்போதும் முற்றாகவே யிருக்கும்; இவற்றுக்கு எச்சமில்லை.
ஏவலுக்கும், வியங்கோளுக்கும் வேறுபாடு:
ஏவல்
1. முன்னிலைக்கே உரியது.
2. அதிகாரத்தோடு கட்டளையிடுவது.
3.ஏவற்பொருளில் மட்டும் வரும்.
4. ஒருமை பன்மை என்னும் எண் காட்டும்.
வியங்கோள்
மூவிடத்திற்கு முரியது.
மரியாதையா- ஏவுவது.
ஏவல், வாழ்த்தல் முதலிய பல
பொருள்களில் வரும்.
ஈரெண்ணுக்கும் பொது.