5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
71
குறிப்பு: உலக வழக்கில் ஓம் என்னும் தன்மைப் பன்மை விகுதி ஒன்றே ஏனை யீரிடத்தையும் உளப்படுத்தும்.
உ-ம். நானும் நீயும் போனோம்.
நானும் அவனும் போனோம்.
நானும் நீயும் அவனும் போனோம்.
68. முன்னிலைப் பெயரோடு படர்க்கைப் பெயர் விரவின் முன்னி லைப் பன்மை வினைமுற்றாலேயே முடிக்கப்படும். இஃது உளப்பாட்டு முன் னிலைப் பன்மை என்று கூறப்படும்.
உ-ம்.
13.
நீயும் அவனும் போனீர், போனீர்கள்.
முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை
(நன்.சூ.334)
11 இடைச்சொல்
ஏகார இடைச்சொல்
69. 'ஏ' என்னும் இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற் றம், இசைநிறை என்னும் ஆறு பொருள்களில் வரும்.
உ-ம்.
1. இவனே திருடினான் - இதில் ஏ என்பது ஒரு கூட்டத்தாருள்
ஏ
ஒருவனைப் பிரித்து நிற்றலால் பிரிநிலை.
2. நீயே சொன்னா-? - இதில் நீயே என்பது நீயோ என்று வினாப் பொருள் தருதலால் ஏ, வினா.
3. அறமே. பொருளே, இன்பமே, வீடே எனப் பொருள் நான்கு - இதில் அறமும் பொருளும் இன்பமும் வீடும் என எண்ணுதலால், ஏ, எண்.
4.
'எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே' - இதில் ஏ ஈற்று அசையா- நிற்றலால், ஈற்றசை.
5. செ-யவே செ-தான் - இதில் ஏ தேற்றப் படுத்துகின்றமையால்,
6.
தேற்றம். (நிச்சயம்).
ஏ யே இவளொருத்தி பேடி! - இதில், பிற பொருளில்லாமல்
நிறைத்து நிற்றலால் இசைநிறை.
இசையை மட்டும்
ஏகாரம் விளி, வியப்பு, உயர்வு, இழிவு முதலிய பொருள்களில் வரு வது முண்டு.