72
இயற்றமிழ் இலக்கணம்
உ-ம்.
14.
ஏ தம்பீ! - விளி. புலவர்க்கே தெரியாதே - உயர்வு.
ஏ அப்பா! - வியப்பு. சிறு பிள்ளையே செ-து விடுமே இழிவு.
பிரிநிலை வினாஎண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை எனஆறு ஏகா ரம்மே.
ஓகார இடைச்சொல்
(நன்.சூ.422)
70. 'ஓ' என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை என்னும் எட்டுப் பொருள்களில் வரும்.
உ-ம்.
1.
3.
படிக்கவோ வந்தா-? - இதில் படிக்கவோ என்பது படித்தற் கன்று; விளையாட வந்தா- என்று ஒழிந்த சொற்களைத் தருதலால், ஓ, ஒழியிசை. (இசை - சொல்).
2. நீயோ இராமன்? - இதில், ஓ வினாப் பொருள் தருதலால், வினா. ஓ ஓ கொடியது! கொடிதம்மா! - இதில் ஓ இழிவு சிறப்புப்பற்றி வந்தது. சிறப்பு - மிகுதி. ஓ ஓ பெரியர்! - இதில் ஓ உயர்வு சிறப்புப்பற்றி வந்தது.
4.
அவனோ கேட்பான் - இதில் அவன் கேளான் என்று
பொருள்படுதலால், ஓ எதிர்மறை.
5. அலியை நோக்கி, இது ஆணோ அதுவுமன்று; பெண்ணோ அதுவுமன்று என்றால் அலி என்பது தெரிய நிற்றலின், ஓ தெரிநிலை.
6.
7.
8.
ஓஓ
ஓ ஓ கெட்டேன்! - இதில் கழிந்த (கடந்த) செ-திக்கு வருந்து தலால், ஓ கழிவு.
பார்மினோ? இதில் ஓ வேறொரு பொருளுமின்றி அசையாகவே நிற்றலால், அசைநிலை.
கல் கனமானது, மணல் நிறையுள்ளது, மூடனுடைய மனமோ அவ் விரண்டினும் கனமானது - இதில் ஓ பல பொருள்களில் ஒன்றைப் பிரித்து நிற்றலால், பிரிநிலை.
ஓகாரம் ஐயம், ஓசை முதலிய பொருள்களிலும் வரும்.
உ-ம். அது கயிறோ, பாம்போ -
ஐயம்
ஓவென் றலறினான் - ஓசை.
15. ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவசை நிலைபிரிப் பெனஎட் டோவே.
(நன். சூ.423)