74
8.
இயற்றமிழ் இலக்கணம்
கோவிற்பட்டி நகருமாயிற்று - இதில் சிற்றூராயிருந்த கோவிற்பட்டி இப்போது நகராயிற்று. என்று ஆக்கப் பொருள் தருதலால் ஆக்கம். இனி, இதற்கு எதிராக, விஜயநகரம் சிற்றூருமாயிற்று. என்பதில், ஒருகாலத்தில் மாநகரமாயிருந்த விஜயநகரம்
இப்போது சிற்றூராயுள்ளது என்று பொருள்படுவது கேடு. உம்மை விரைவுப் பொருளிலும் வரும்.
உ-ம்.
வந்ததும் சென்றான்.
16.
எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை தெரிநிலை ஆக்கமோ டும்மை எட்டே.
12. உரிச்சொல்
(நன்.சூ.425)
72. உரிச்சொல் பெயரைத் தழுவின் பெயருரிச்சொல் என்றும், வினை யைத் தழுவின் வினையுரிச்சொல் என்றும் கூறப்படும்.
உ-ம்.
வடிவேல்
கழிமகிழ்ச்சி கடிநகர்
வடி, கழி, கடி பெயருரிச்சொற்கள்.
வடி = கூர்மை, கழி = மிகுதி, கடி = காவல்.
உ-ம்.
சால வுண்டான்.
நனி வளர்ந்தான்.
சால, நனி, தவ வினையுரிச்சொற்கள்.
தவப் பெற்றான்.
சால, நனி, தவ இம் மூன்றும் மிகுதிப் பொருளன.
13. பொதுவியல்
73. சொற்கள் பொருளுணர்த்தும் முறை குறிப்பு, வெளிப்படை என இருவகைப்படும். (குறிப்பு - மறைவு, வெளிப்படை - விளக்கம்).
குறிப்பு
74. ஒன்றொழி பொதுச்சொல், விகாரம், தகுதி, ஆகுபெயர், அன் மொழித்தொகை, குறிப்புவினை, முதற்குறிப்பு, தொகைக் குறிப்பு முதலிய பல சொற்கள் குறிப்பா-ப் பொருளுணர்த்தும்.
உ-ம்.
ஒன்றொழி பொதுச்சொல்: ஒன்றொழி பொதுச்சொல்லாவது: ஆண், பெண் என்னும் இருபாற்கும் பொதுவான சொல். அவற் றுள் ஒன்றை யொழித்து மற்றொன்றைக் காட்டுவது.