90
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
4.மக்கள் முயற்சியால் சிறுமொழிகளும் பெருமொழிகளாக வளர்ந் துள்ளன.
5. திரிபினாலும் கலப்பினாலும் பல புதுமொழிகள் தோன்றியுள்ளன. 6.மக்களெல்லாரும் என்றும் ஒரே மொழியைப் பேசுமாறு இறைவன் செ- திருக்கலாம்.
7. இறைவன் படைத்திருந்தால் மொழிகள் இன்றிருப்பதினும் மிகச் சிறப் பாகவும் குற்றங்குறையற்றும் இருந்திருக்கும்.
(2) ஒப்பந்தக் கொள்கை (Contract Theory)
இது மக்கள் கூடி இன்ன ஒலி இன்ன பொருளுணர்த்துக என்று ஒப்பந் தஞ் செ-துகொண்டது மொழி என்பது. இது உரூசோ கொள்கை
இது
வெண்ணெ
தடவிக் கொக்குப் பிடிக்குங்
தன்மறுப்புக் கொள்கையாதலால் ஆ-விற்குரியதன்றாம்.
(3) தூண்டுணர்ச்சிக் கொள்கை (Instinct Theory)
கதைபோல்
இது, இயற்கையாக மாந்தனிடையெழுந்த தூண்டுணர்ச்சி யொலி களால் மொழிதோன்றிற் றென்பது. இது காண்டிலக்கு கொள்கை.
இதுவும் இறைவன் படைப்புக் கொள்கைபோல் ஏரணமுறைக்கு ஒவ்வாததே.
(4) குறிப்பொலிக் கொள்கை (Pooh- pooh Theory)
இது மாந்தனின் இன்ப துன்பக் குறிப்பொலிகளால் மொழி தோன்றிற் றென்பது.
குறிப்பொலிகள், ஒருசில கருத்துகளையேயன்றி எல்லாக் கருத்துகளை யும் உணர்த்தும் சொற்றொகுதியைத் தோற்றுவிக்கும் ஆற்றலற்றவையாகும்.
(5) ஒப்பொலிக் கொள்கை (Bow - wow Theory)
இது விலங்கு பறவைகளாலும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் எழும் ஒலிகளைப் பின்பற்றிய சொற்களைக் கொண்டு மொழி தோன்றிற் றென்பது.
ஒப்பொலிக களும் எல்லாக் கருத்துகளையும் உணர்த்தும் சொற்களைப் பிறப்பிக்கும் ஆற்றலற்றவையே.