மொழிநூல் சுருங்கை
சுல் -சூல். சூலுதல் = தோண்டுதல்.
"நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை
=
சுல் -) சுன்) - சுனை = துளைவழியா- நீர்சுரக்கும் நீர்நிலை.
சுல் -சுர் - சுர. சுரத்தல் =துளைவழியாக நீர் ஒழுகுதல்.
67
(நாலடி.44)
சுர = சுரை = சுரக்கை, பால் சுரக்கும் மடி, கறவை, உட்டுளை, திருகாணிக்
குழா-, மூங்கிற்குழா-, நெற்றானபின் உட்டுளை விழும் கா-,
சுர - சுரப்பு - சுரப்பி - சுரபி = கறவையிற் சிறந்த ஆ.
―
சுர சுரங்கு - சுரங்கம் = வெடிமருந்திடும் குழி, கீழ்நிலவழி, இரும்பு முதலியன தோண்டியெடுக்கும் கனி.
சுர் -சுரு -சுரி. சுரித்தல் = துளையிடுதல். சுரி =துளை (திவ.), ஏட்டுத்துளை.
―
—
சுரு (சுருங்கு) சுருங்கை – நுழைவாயில், நீர்செல்லுங் கரந்து படை,
கீழ்நிலவழி.
—
சுர ஸ்ரு (இ.வே.), சுருங்கை = ஸூருங்கா (வ.) சுரப்பி -சுரபி ஸூரபி (வ.), சுருங்கை ஸூருங்கா (வ.),
Surigx என்னும் கிரேக்கச் சொற்குக் குழா- என்றுதான் பொருள். ஆங்கிலத்தில்தான் அதற்குச் செவிக்குழா-, சுருங்கை முதலிய பொருள்கள் கொள்ளப்பெற்றுள்ளன. ஆதலால், மேற்காட்டிய வடசொற்கள் போன்றே கிரேக்கச் சொல்லும் தமிழ்ச்சொல் திரிபாகும். துளைத்தல் என்னும் வேர்ப் பொருளும் சுல் என்னும் அடிவேரும் ஆரியமொழிகளி லின்மையுங் கவனிக்கத்தக்கதாம்.
கன்னல்
கல்லுதல் = தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரிற் குடையும் துளை. கன் -கனி = நிலத்தில் தோண்டும் சுரங்கம்.
=
கன்- கன்னல் = உட்குழி, நீர்க்கலம், நாழிகை வட்டில், நாழிகை, உட் டுளையுள்ள நாணல், நாணல் வகையான கரும்பு.
ஒ. நோ: நுள் - நள் - நாளம் - நாணல்.