52
2
செந்தமிழ்க் காஞ்சி
இரும்பும்இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்புநிலக் கரியும் பரும்பெனக்கு விந்துதொழிற் சாலைகள் பலவும்எழுந் தாலும் விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்ததமிழ் நைய உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறுசெயின் நன்றோ?
3
கீழ்கரைநின் றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை
மேல்கரைநேர் சேரவிணை யாகிப்பின் மின்னோட்டம்வந் தாலும் சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின்ஒரு நன்றோ?
4
பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டிதொட்டி யெல்லாம் நள்ளியெதுங் கட்டணமே யின்றிநல் கூர்ந்தாருங் கற்றாலும் வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்ததமிழ் நைய கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ?
5
முதியோரெலாம் இளமைவர மூப்புச்சம் பளமும் பெற்று வாழ்ந்து பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள்பெற் றாலும் மதிசூடிமுன் மதுரையமர் மன்றஞ்சேர்ந் தாய்ந்ததமிழ் நைய புதிதாய்வரும் இந்தியொடு நாகரி புகுமேல்ஒரு நன்றோழூ
6
நண்ணும்நடுப் பகல்மாணவர் நாட்டுள்ள பள்ளிகளி லெல்லாம் உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியேவந் தாலும் பெண்ணியிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்ததமிழ் நைய எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல்செயின் நன்றோ?
7
புத்தாடைபல் பொத்தகங்கள் பூந்துகிற் பொக்கணத்தி லிட்டுத் தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற்றந் தாலும் பித்தனென்னும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்ததமிழ் நைய எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின்ஒரு நன்றோ?