ஞா. தேவநேயப் பாவாணர்
8. பழந்தமிழன் சிறப்பு
‘ரகுபதி ராகவ ராசாராம்' என்ற மெட்டு
1
தமிழா உன்றன் முன்னவரே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே.
2
பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம்
3
யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம்
4
(தமிழா)
(தமிழா)
கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம்
5
(தமிழா)
தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம் அடுத்தவனாம் (தமிழா)
6
காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் கங்கை வடக்கும் எட்டினனாம் கயலைப் பனிமலை நட்டினனாம்
7
நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம்
8
அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி நெய்தானாம்
(தமிழா)
(தமிழா)
அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிர விளைநன் செய்தானாம். (தமிழா)
9
நானில மெங்கும் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற்பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு
(தமிழா)
7